Thursday, May 10, 2018

பாரிவள்ளல் முத்தரையர் ஆண்ட பறம்பு மலை


நமது பாரிவள்ளல் முத்தரையர் ஆண்ட பறம்பு மலை வரலாறு

பிரான்மலை வரலாற்று சுவடு ...

பறம்பு மலை என்ற பிரான்மலை வரலாறு - முனைவர் கோ.ஜெயக்குமார். 

மதுரை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, பொன்னமராவதி ஆகிய நகரங்களிலிருந்து பேருந்தில் செல்ல முடியும். பறம்பு மலை சங்க காலத்தில் முல்லைக்குத் தேரீந்த வள்ளல் பாரி வாழ்ந்த மலையாகும்.

இம்மலை கபிலர் முதலான புலவர்களால் பாடப்பெற்ற புகழுடையதாகும். சங்க காலத்தில் பறம்பு மலை எனவும், பின்னர் திருநெலக்குன்றம் எனவும் சமய இலக்கியங்களில் திருக்கொடுங்குன்றம் எனவும், பெயர் பெற்ற இம்மலை தற்போது பிரான்மலை எனவும் வழங்கப்படுகிறது.

"ஈண்டுநின் றோர்க்கும் தோன்றும் சிறுவரை சென்று நின்றோர்க்கும் தோன்றும்" என்று கபிலர் பாடல் குறிப்பிடுவது போலவே 2450 அடி உயரத்துடன் நெடுந்தூரத்திலிருந்து பார்க்கவும் தெரிவதாக இம்மலை அமைந்துள்ளது.

 


சிங்கம்புணரிக்கு நெடிய இலக்கிய வரலாறு உண்டு. இவ்வூரின் பெருமையைச் சிங்காபுரிப் பள்ளு என்னும் இலக்கியம் தெளிவுற விளக்குகிறது. ஸ்ரீசேவுகமூர்த்தி ஐயனார் கோயில், ஸ்ரீ சித்தர் முத்துவடுகேசர் கோயில் ஆகியன இங்கு புகழ் மிக்கவையாகும்.

பறம்பு மலையைத் தலைமையிடமாகக் கொண்டது பறம்பு நாடு. இது பாண்டிய நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது. இந்நாடு பறம்புநாடு, பாரிநாடு, எனவும் வழங்கப்படும். இது சங்க காலத்திலிருந்து புகழ் பெற்றிருந்தது. இந்த நாட்டை வேள்பாரி. கி.பி 2ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஆண்டான். வேளிர் குலத் தலைவனாக விளங்கிய இவன் ஈரத்திலும் வீரத்திலும் சிறந்து விளங்கியவன் பாரி மன்னன்அதனுடைய எல்லைகளாக,


தென்னெல்லை - திருமோகூர் முதல் கீழ் மேலோடிய 
வையையாற்றங்கரை - பறம்புக்குடி கிழக்கெல்லை - பறம்புக்குடி- காளையார் கோயில் - முத்து நாடு - அனுமந்தக் குடி- பறம்பு வயல் வடவெல்லை - பறம்பு வயல் - கானாடுகாத்தான், சோனாபட்டு - திருக்கோளக்குடி - பூலாங்குறிச்சி - இடையாற்றூர் குடுமியான்  
மலைப்புறம் - பறம்பூர்
மேற்கெல்லை - பறம்பூர் - மருங்காபுரி - துவரங்குறிச்சி - நத்தம்  
மலைகளின் கிழக்குப் பகுதி - அழகர் மலைக் கிழக்குப் பகுதி - பறம்புக் கண்மாய் - திருமோகூர் எனக் கொள்வர். பிற்காலத்தில் இப்பறம்பு நாடு பாண்டி மண்டலத்தின் ஒரு பகுதியாக மாறியது.


பாரிவேட்டை என்ற பெயரில் ஒரு வேட்டை இப்போதும் முத்தரையர் சமுதாயத்தினர் ஆண்டுதோறும் நடைமுறைபடுத்தி வருகின்றனர். இம்மலையிலிருந்து 15 கி.மீ. எல்லைக்குட்பட்ட கிராமங்களில் வாழும் மக்கள் இந்த வேட்டையை(வலையர்கள்) மரபாக நடத்தி வருகின்றனா்.
இம்மலைக்குத் தெற்கே கூத்துப் பாரிப் பொட்டல் என்று ஓர் இடம் இருக்கிறது. இப்பெயர் கூத்தையும் பாரியையும் தொடர்புபடுத்தி உணர்த்துவதாய் உள்ளது. பாரிவேட்டைக்குச் சென்று திரும்பும் போதில் இங்கு கூத்து நடக்கும்.
முல்லைக் கொடிக்குத் தேர் கொடுத்ததை நினைவுபடுத்தி இன்றும் இப்பகுதிகளில் கொடி தளும்பினால் குடி தளும்பும் என்னும் சொல்லாடல் வழக்கில் இருந்து வருகிறது. இப்பகுதியில் குழந்தைகளுக்கு பாரி, கபிலன், முல்லைக்கொடி, நல்லமங்கை, அங்கவை, சங்கவை என்னும் பெயர்கள் வைக்கப்படுகின்றன.

முத்தரையர் சமுதாயத்தினரால் இங்கு  பாரி வள்ளல் அறக்கட்டளை மற்றும்
பாரி வள்ளல் என்ற பெயரில் பள்ளிகளை நடத்தி வருகின்றனர்.




பறம்பு மலை சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம் சிங்கம்புணரிக்கு அருகில் உள்ளது. காரைக்குடியிலிருந்து மேற்கே 42 கி.மீ. தொலைவிலும், மதுரையிலிருந்து வடக்கே 63 கி.மீ. தொலைவிலும், புதுக்கோட்டையிலிருந்து தென்மேற்கே 45 கி.மீ. தொலைவிலும் உள்ளது. சிங்கம்புணரியிலிருந்து கிருங்காக்கோட்டை வழியாக 7 கி.மீ தொலைவில் உள்ளது.






மாமன்னன் பெரும்பிடுகு முத்தரையன் (சுவரன் மாறன்):

    இம்மன்னனைப் பற்றிய செய்திகள் செந்தலை கல்வெட்டில் விரிவாக கூறப்பட்டுள்ளன. இவை அனைத்தும் பாவடிவிலேயே அமைந்துள்ளன. இவற்றுள் சில சிதைந்துள்ளன. "வீரத்தின் உளைக்களனாக, வெற்றியின் நிலைக்களனாக வாழ்ந்த இவ்வற்றால் மறவன் களம் பல கண்டு வெற்றி பல கொண்டு போரில் பெரும் பங்கு வகித்தான்" என இராசசேகர தங்கமணி கூறுவார்.

சுவரன் மாறனுடைய செந்தலை கல்வெட்டில் சுவரன் மாறன் பாண்டியர்கள் மீதும் சேரநாட்டு அரசன் மீதும் கீழ்கண்ட இடங்களில் வெற்றி பெற்றான் என கூறபட்டுள்ளது. அவ்விடங்களாவன கொடும்பாளூர், மணலூர், திங்களூர், காந்தளூர், அழுந்தியூர், காரை, மரங்கூர், அண்ணல்வாயல், செம்பொன்மாரி, தஞ்சை செம்புல நாட்டு வென்கோடல், புகலி, கண்ணனூர் முதலியன. இவ்விடங்களில் எல்லாம் தஞ்சை, புதுகோட்டை, திருச்சி, ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்றும் உள்ளன. செந்தலை கல்வெட்டு சுவரன் மாறனால் ஆதரிக்கப் பெற்ற கவிஞர்களால் ஆக்கபெற்ற மெய்கீர்த்திகள் என்று கொண்டாலும் அவைகள் முற்றிலும் வரலாற்று உண்மைகள்.

சுவரன் மாறன் பல்லவ மன்னன் இரண்டாம் நந்திவரமனுடைய படை தலைவனுடன் சேர்ந்து மேற் கூரபெற்ற இடங்களில் வேடர்களை பெற்று பல்லவ பேரரசை நிலை பெற செய்தான் எனக்கூறலாம்.

செந்தலைதூண் கல்வெட்டு

     செந்தலை சுந்தரேஸ்வரர் கோயில் முன் மண்டபத்தில் காணப்பெறும் நான்கு தூண்களின் அடிப்பாகங்கள் சிதைந்து காணப்பெறுகின்றன, அவைகள் சிதையாமல் இருந்திருந்தால் 27 வெண்பாக்கள் நமக்கு கிடைத்திருக்கும், இந்த நான்கு தூண்களில் காணப்பெறும் கல்வெட்டுக்கள், சுவரன் மாறன் நியமத்தில் பிடாரி கோயில் ஒன்று எடுபித்த செய்தியை தெரிவிக்கின்றன. மற்றும் தான் வெற்றிகொண்ட ஊர்களின் பெயர்களையும் கல்லில் வெட்டும்படி ஆனையிட்டுல்லான். அதனை சுவரன் மாறானவன் எடுபித்த பிடாரி கோயில் அவனேரிந்த ஊர்களும் அவன் பேர்களும் அவனை பாடினர் பேர்களும் இதூங்கன் மேலேழுதின இவை" என அக்கல்வெட்டு கூறுகிறது. இக்கல்வெட்டுகளில் சுவரன் மாறன் கீழ்கண்ட பட்டங்களை மேற்கொண்டுள்ளான்.

 

(1 ) சிரீசத்துரு மல்லன் (2 )சிறீ கள்வர் கள்வன் (3 ) சிறீ அதிகாசன். மேலும் பத்து பட்ட பெயர்களையும் அக்கல்வேட்டுக்கள் குறிப்பிடுகின்றன. அவையாவன சிறீ மாறன், அபிமான தீரன், சத்துரு கேசரி, தமராளன், செருமாரன், வேலு மாறன், சாத்தன் மாறன், தஞ்சை கோன், வல்லக்கோன், வான்மாரன் முதலியனவாகும். சுவரன் மாறனை பற்றி மூன்று தமிழ் புலவர் பாடியுள்ளதாக அவனிடைய கல்வெட்டுகளிலிருந்து அறிகிறோம்.

 

திருச்சி மாவட்டத்தில் உள்ள பாசில் வேல் நம்பி
கோட்டாற்று இளம் பெருமானார்
கிழார்க் கூற்றத்துப் பவதாயமங்கலத்து குவாவன் காஞ்சன்

மேற் கூறப்பெற்ற விருது பெயர்களையும், சுவரன் மாறனை பற்றிப் பாடிய புலவர்களையும் ஆதாரமாக கொண்டு இகுறுநில மன்னர் ஒரு பெரும் பேரரசனாகத் திகழ்ந்தான் என்று நடன காசிநாதன் கூறுகிறார். "முத்தரைய அரசர்களுள் இவன் பெரும் பேரரசனகத் திகழந்தவன் என்று கூறலாம். பல்லவ மன்னர்களுள் முதலாம் நரசிம்மவர்மனுக்கும், சோழ மன்னர்களுள் முதலாம் ராசராசனுக்கும் பாண்டிய மன்னர்களுள் மாறவர்மன் சுந்தரபாண்டியனுக்கும் இவனை ஒப்பிடலாம். தமிழ் புலவர்களை ஆதரித்து தனது வெற்றிகளை குறிக்கும் செய்திகளை வெண்பாக்களில் எழுதி பொரிக்க செய்த செய்கையால் வரலாற்றுக் காலத்தில் வாழ்ந்த தமிழ் மன்னர்கள் அனைவரையும் இவன் விஞ்சி நிற்கிறான்".


No comments:

Post a Comment